காலனியம் ஏற்படுத்திய நவீன சமூகப் பொருளியல் மாற்றங்களைத் தீங்கு என்றும் அது கலானிய கெடுநோக்கில் இருந்து உருப்பெற்றது என்றும் அவ்வாய்வுகளைச் சதிக்கோட்பாடுகளாக மாற்றுகிற ஒரு பழமைவாத வருணசிர சமூக மேலாதிக்கத்தை உருவாக்கும் ஆய்வுகள் நீண்டகாலம் இருந்து வந்தபோதிலும் அவைத் தற்போது உச்சம் பெற்றுள்ளது. காலனியம் மொழித் துறையில் செய்த ஆய்வுகளைப் புறந்தள்ளி ஒரு சமஸ்கிரித மொழி ஆதிக்க மரபை மீட்டெடுக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் காலனியத்தால் உருவான நவீன சமூக மாற்றங்களை காலனியத்தின் சுரண்டல் என அடைமொழியாக்குவதை இந்நூல் மறுத்துரைக்கும் முதன்மையான பணியைச் செய்திருக்கிறது.