மரு. சிரீராம், மனநல மருத்துவர் தேசிய மீள்குடியமர்த்தல் கொள்கை சரிவரப் பின்பற்றப்படாததும் தெளிவாகிறது. அது சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தால் உடல்நல, மனநல பாதிப்புகளைக் குறைத்திருக்கக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நலம் என்பது தனிப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாதது. ஒரு தனிநபரின் நலம் என்பது சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசுக்கொள்கைகள், கல்வி, வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு நெருக்கமான தொடர்புடையதாகும். உலக நல அமைப்பின் (WHO) பார்வையில், நலம் என்பது நோயின்றி இருப்பது மட்டுமல்ல; உடல், மன, சமூகப்படியான முழுமையான நலமே ஆகும். […]